தேடலின் மூலம்


எங்கோத் தவறு..
எங்கு தவறு? 
தெரியவில்லை
இடம் தெரியாதத் தவறை
தேடும்தோறும்
அறியாத தவறுகள் பல
அறியக் கிடைக்கின்றன..
அகற்றியபடி மேன்மேலும் தேடுகின்றேன்
மூலமான அந்தத் தவறை..
நாளின் இறுதிவரை
அது எங்கெனத்
தெரிவதே இல்லை..
துயரில்லை
தெரியாத அந்த தவறினால்தான்
மேலும் மேலும்
எம் தவறுகள் களையப்பட்டு
யான் மேம்படுகிறேன்...
எங்கோத் தவறு ஒன்று
எப்போதும் வாழட்டும்
ஏனெனில்
அதைப் பிடித்துக் கொண்டே நான்
ஆண்டவன்
பாதம் தொடும் தூரம் வரைகூட
சென்றுவிடகூடும்

Comments

Popular posts from this blog

அன்னமய்யா

சொல்லடா பிரகாசா