Posts

Showing posts from May, 2012

My black box (I)

Image
         " நீர் வழி படூஉம் புனை போல்            ஆருயிர் முறை வழி படூஉம்.."                                                 - கனியன் பூங்குன்றனார் (purananooru)                 I don't know why these days are going so hard.. My mind is restless.. Some unidentified pressure cover every half of my day. I am always in search but i don't know what I am searching for. I red a small story few years back, in which a crab, a rat and  a bird were friends. Once they got a box full of their food and they wanted to bring it with them. they tied three threads with that box and pulled it. Unfortunately the box didn't move an inch as the crab pulled it in to the river, rat in to land whereas bird to the sky. Nowadays I feel like that box.  Different vectors act on me in different directions. Neither i move anywhere nor be free. Some pressure in mind and some confusions in heart always remain in deep. I wanna change but cant decide to what. Endless questions

சிந்திக்க வெச்சுட்டாங்க..

Image
 பர்தா முறைக்கு ஆதரவான ஒரு இஸ்லாமிய சகோதரியின்  கவிதை.. பத்திரமாயிருக்கிறேன்... எனக்குள் - நான் மிக மிகப்பத்திரமாய்....!!! எச்சில் இலைமீதான இலையான்களைப்போல எவர் கண்ணும் ... என்னை அசிங்கப்படுத்துவதும் இல்லை...!!! டீக்கடை தாண்டி நடந்து போகையில்... எல்லோர் கவனமும் பறித்து என்னைப்பற்றியே விமர்சித்துத் தொலைத்து பாவங்களால் நிரம்பிவழிய... வாய்ப்பளிப்பதில்லை- நான்...!!! என்னைப் பின்தொடர்ந்து வா... விசிலடி..!!!! கேலிசெய்....!!! என யாரையும்... என் உடைகளால் சீண்டிவிடுவதில்லை நான்...!!! வகுப்பறைகளிலும்... பாடப்புத்தகம் மீதான அடுத்தவர் கண்களை ஒருபோதும் கிழித்துப்போடுவதில்லை-நான் !!! விழிகளால் ஊரே ரசித்து... கழித்துப்போட்ட எச்சில் பண்டமாய் எப்போதும் இருந்ததில்லை - நான்!!! அல்லாஹ்வின் கட்டளைகளில்; கணவனின் கண்களில்; நான் மிகப்பெரும் அழகியாய் உயர்ந்து நிற்கிறேன்...!! நன்றி:சர்மிளா ஹமீத் .

சுயம் மற்றும் சில வேண்டுதல்கள்

Image
ஏன் ஈதேமக்கு, எந்தையே சொல்மின்! பார்மீ தினில்யான் படுதலு மேனோ? சீரது வெதுவென எமக்குள் பதித்தும்  சிதைப்பது  மேனோ எம்சிறு வாழ்வை? எண்ணிய தெய்திடும் உள்ளொளி தந்தீர்.. திண்ணிய னாக்கிட  மறந்ததும் சரியோ? பண்ணிய பாவ மெதுவென  அறியேன், சென்னியின்  சோதியைக் குடத்திலேன் இட்டீர்? பிறந்ததை எதற்கென   அறிந்திட செய்தல்  மறந்தது தகுமோ மனத்திடம் கேட்பீர்!  சிறந்தது வெதுவென அறிந்தும் யானுலகில்  கறந்ததை மறந்தேன் கள்ளினைக்  கொண்டேன்? எனைத்தான் மனத்துள் இருப்பீர் ஐயா, உனைத்தான் மறந்துயான் ஏதினைப் பிடிப்பேன் ? அணைத்தெனை யாண்டிட உன்னையும் அன்றி  துணையென பிறகொண் டெங்ஙணம் உய்வேன் ? எந்தையே என்சொல் இக்கணம் கேட்பீர்  நிந்தனை எமக்கிலை  உமக்கே யாகும் சிந்தனை கொண்டும் யான் துயர்மிகக் கொண்டால்  வந்தனை உமக்காற்றி பீடென்ன சொல்மின்? மோகத்தை  யழித்தே  மனத்திடை மண்டிட்ட  சோகத்தை ஒழித்தே சுகமதைத் தெளிப்பீர்! தாகத்தை யாற்றிஎம் வாழ்விலே எஞ்சிய  பாகத்தை யாயினும் பயனதாய் செய்மின் !     

தனியாய் விடுங்கள்

Image
என் மோனக்குளத்தைக்  கலக்காதீர்கள்... வந்து விழும்  உங்கள் ஒவ்வொரு கல்லிலும்  தெறித்து வெளியே விழுகிறது, உடைந்த என் மனத்தின் துண்டுகள்..!