உள்ளிருந்து மலர்தல்
சம்பவங்கள் அல்லது சகநிகழ்வுகளின் தொடர்ச்சியான கோர்வைதான் காலமாக பரிணமிக்கிறது. நிகழ்வுகள் இல்லாத ஓரிடத்தில் காலம் தன் உரு இழந்து காணாமல் போகும். ஒரு விதத்தில் காலமும் மனமும் ஒன்றுதான். காலத்திற்கு சம்பவங்கள் என்றால், மனத்திற்கு எண்ணங்கள். இடையறாத எண்ண ஓட்டங்களே நம் மனதை அடையாளப்படுத்துகிறது. எண்ணங்கள் ஒருமித்து ஒடுங்கும் ஒரு புள்ளியில் மனம் அழிகின்றது. மனமற்ற நிலை வெறுமை அல்லது ஏகாந்த ம். மனமற்ற அந்த நிலையில் பிரபஞ்சப் பருப்பொருட்களிலிருந்து என் சுயம் தன் மாறுபாடுகளை முற்றிலுமாக இழந்து போகின்றது. அது, அவையுடன் கலந்து காணாமல் போகின்றது. அந்த ஒரு புள்ளி வாழ்வின் சம்பவங்களில் அந்தமானது. உண்மையில் அது சுயத்தின் சம்பவமல்ல. சுயத்தின் வெளியில் உள்ள ஒன்றின் சம்பவம். சம்பவங்கள் அற்ற சுயத்தின் அந்நிலையில் சுயம் தன் கால பரிமானத்தை முற்றிலுமாக இழக்கிறது. அது ஒருவகையில் தூக்கம் போன்றது என்றாலும் அது உண்மையில் தூக்கம் இல்லை. தூக்கத்தில் மனம் முற்றிலுமாக ஒடுங்குவதில்லை. மாறாக அது வெறுமனே சற்று ஓய்வு கொள்கிறது. ஆயினும் அது பூரண ஓய்வு அல்ல. கனவுகளில் கால்கள் பாவித்து அது கொள்ளும