Posts

Showing posts from 2017

அண்ணனாதல்

"நேரா உட்காரு!" முதுகில் தட்டினான் அண்ணன். எல்லாத் தம்பிகளுக்கும் போலவே எனக்கும் முதல் குரு அவந்தான். அழாமல் பள்ளி செல்ல என்னைப் பழக்கியவன் அவன்.. எப்போதும் அவனாய் ஆகிவிட வேண்டும் என்ற ஏக்கம்தான் என் பால்யம் என இன்று நினைவுகூறுகிறேன். அவன் போல் அழகாய் எழுத வேண்டும்; அவன் போல் குறி பார்த்து புளியம்பழம் எறிய வேண்டும்; அவன் போல் துணிச்சலாய் இருக்க வேண்டும்; அவன் போல் உயரத்தில் இருந்து குதிக்க வேண்டும்; அவன் போல் பட்டாசுப்வெடிக்கையில் காது மூடாமல் இருக்க வேண்டும்; அவன்போல் கை விட்டு சைக்கிள் ஓட்ட வேண்டும்.. இன்னும் எத்தனையோ அவன் போல்.. என் எல்லா பிள்ளை முயற்சியும் அவன் போல் ஆக வேண்டும் என்பதன் தொடர்ச்சியாகவே இருந்தது.. அன்றும் அப்படிதான், அவன் போல் ஆக அவனிடம் சைக்கிள் பழகிக் கொண்டிருந்தேன்.  வீட்டில் தின்னக் கிடைக்கும் நொறுக்குப் பண்டத்தில் என் பகுதியின் பாதியை குரு தட்சிணையாகத் தர வேண்டுமென ஒப்பந்தம்.. முழுதும் தரவும் சம்மதம்தான், விரைவில் அவனாக வேண்டுமே..! நேராக அமரும் தோறும் அவன் மீது சரிந்தேன்.. "சாயாதே.." சினந்து கட்டளையிட்டான் நிமிர்ந்து அமர்ந்தேன்.. "ஹ

அழிவின் ஞானம்

காளி தேவியை நரேந்திரர் ஏற்றுக்கொண்டதை ஸ்ரீராம கிருஷ்ணர் மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகக் கருதினார்.  ஏன்? காளி-மயானம், சுற்றிலும் எரிகின்ற பிணங்கள், பேய்களின் கோரத் தாண்டவம், நரிகளின் ஊளைச் சத்தம், விரித்த கூந்தல், ரத்தம் சொட்டத் தொங்கும் நாக்கு, மனிதத் தலைகள் கோர்த்த மாலை, கையில் ரத்தம் சொட்டும் வாள், வெட்டப்பட்ட தலை, சிவபெருமானின் மார்புமீது நிற்கின்ற கோலம் இது அவளது தோற்றம்! வாழ்க்கையின் மறுபக்கத்தைக் காட்டுகின்ற ஒரு சின்னமாக விறங்குகிறாள் அவள்.  இன்பமும் இதயமும் இனிமையும் அழகும் ஆனந்தமும் மட்டும் கலந்தது அல்ல வாழ்வு. வாழ்விற்கு மறுபக்கம் ஒன்று உள்ளது. துன்பமும் துயரமும தீமையும் கோரமும் அழுகையும் நிறைந்தது அது. அது எங்கிருந்து வந்தது? சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளிலேயே அதனைக் கேட்போம். தீமை ஏன் உள்ளது? இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரே வழி நன்மை, தீமை இரண்டையும் கடவுள் படைத்தார் என்று கொள்வதே...... இறைவன் எப்போதும் நல்லவரேயானால், அந்தத் தீமையனைத்திற்கும் பொறுப்பாளி யார்? சாத்தான் என்று ஒரு பேர்வழி இருப்பதாகக் கிறிஸ்தவரும் முகமதியரும் கூறுகின்றனர். இரண்டு பேர்வழிகள் ச