பனித்துளி: சில கேள்விகள்
பனித்துளி : சில கேள்விகள் * எந்த தேவதைகள் குளிக்க இந்த தளிர்கள் நீர் சுமந்து காத்திருகின்றன ? * பனித்துளி குடித்து எப்படி தாகம் தணிகிறான் சூரியன் ? * ரோஜாக்களின் பருக்கள் மட்டும் எப்படி இத்தனை அழகாய் ? * தாவரங்களுக்கும் அம்மை வருமோ ? * பனிக்காற்றுக்கு புற்கள் மேல் என்ன காதல்..? முத்துகளால் அலங்கரித்து பார்க்கிறதே.. ! * மார்கழிக் காலையில் புல்வெளியைப் பார்க்கின்றேன்.. ஒரு பூமிமேல் எத்தனை பூமிகள்..! * இரவெல்லாம் காற்று விதைத்த முத்துக்களை காலையில் கதிரவன் ஏன் அறுவடை செய்கிறான்..? * இந்த பனித்துளிகள் மலர்மேல் உள்ளவரை வைரமாயும் கீழே விழுகையில் கண்ணீராயும் தெரிவது ஏன்.. ?