பனித்துளி: சில கேள்விகள்


பனித்துளி: சில கேள்விகள்

* எந்த தேவதைகள் குளிக்க 
   இந்த தளிர்கள் 
   நீர் சுமந்து காத்திருகின்றன  ?

* பனித்துளி குடித்து 
   எப்படி தாகம் தணிகிறான் 
   சூரியன் ?

* ரோஜாக்களின் பருக்கள் மட்டும் 
   எப்படி இத்தனை அழகாய் ?

* தாவரங்களுக்கும் 
  அம்மை வருமோ ?

* பனிக்காற்றுக்கு 
   புற்கள் மேல் என்ன காதல்..?
   முத்துகளால் அலங்கரித்து 
    பார்க்கிறதே.. !

* மார்கழிக் காலையில் 
   புல்வெளியைப் பார்க்கின்றேன்..
   ஒரு பூமிமேல் 
   எத்தனை பூமிகள்..!

* இரவெல்லாம் 
  காற்று விதைத்த 
  முத்துக்களை 
  காலையில் கதிரவன் ஏன் 
  அறுவடை செய்கிறான்..?

* இந்த பனித்துளிகள்  
  மலர்மேல் உள்ளவரை 
  வைரமாயும்   
  கீழே விழுகையில் 
  கண்ணீராயும் 
  தெரிவது ஏன்.. ?

Comments

  1. Nice Writer Anna........ Vaazhthukkal...........

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அழிவின் ஞானம்

Be Present

கனவுலகம்