Posts

Showing posts from 2013

பால்யம்

தொடக்கப் பள்ளி நாட்களில் நாலணாவை கையில் வைத்துக்கொண்டு மிட்டாய் வாங்க நான் நிற்கும் கடை இன்று முற்றிலுமாக இடிக்கப் பட்டிருப்பதைக் கண்டேன். தாத்தாவின் பொடி முதல் வீட்டின் மளிகைத் தேவைகள் வரையென சில ஆயிரம் முறைக்குக் குறையாமல் நான் அந்த கடை முன் நின்றிருப்பேன். இன்று, வெறித்த அந்த இடம், நின்று யோசிக்க நேரம் தொலைத்துபோன என் பால்யத்தை எனக்கு மீண்டும் நினைவூட்டியது. களைத்த தேன் கூடாய் எழுந்து பறக்கும் பலநூறு நினைவுகள். புதையலை வழியில் தொலைத்தவன் போல வெறியுடன் ஊரைச் சுற்றி வருகிறேன். என் ஊரே இன்று எனக்கு அந்நியமாய்த் தெரிகிறது. ஊரே கதி என்று நான் வாழ்ந்த காலத்தில் எதெல்லாம் என் ஊரின் முகம் என்று எனக்கு தோன்றியதோ அதிலெல்லாம் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றி விட்டர்கள். இந்த புதிய முகம் முன்பை விட அழகாக இருந்தாலும் இது எனக்கு அந்நியமானதே.   என் பள்ளி இன்று என் பள்ளியாய் இல்லை. என் நண்பரகள்  யாரும் இன்று ஊரில் இல்லை.  பிரதான சாலை முதல் சந்து பொந்து வரை எல்லாம் வேறு வேறாய். அன்று ஒவ்வொரு சந்தையும் அடையாளப்படுத்திய பல வயதான முகங்கள் தாங்கள் மடிந்த செய்தியை மட்டும் மிச்சம் வைத்து காணாமல் போ

உள்ளிருந்து மலர்தல்

Image
        சம்பவங்கள் அல்லது சகநிகழ்வுகளின் தொடர்ச்சியான கோர்வைதான் காலமாக பரிணமிக்கிறது. நிகழ்வுகள் இல்லாத ஓரிடத்தில் காலம் தன் உரு இழந்து காணாமல் போகும். ஒரு விதத்தில் காலமும் மனமும் ஒன்றுதான். காலத்திற்கு சம்பவங்கள் என்றால், மனத்திற்கு எண்ணங்கள். இடையறாத எண்ண ஓட்டங்களே நம் மனதை அடையாளப்படுத்துகிறது. எண்ணங்கள் ஒருமித்து ஒடுங்கும் ஒரு புள்ளியில் மனம் அழிகின்றது.  மனமற்ற நிலை வெறுமை அல்லது ஏகாந்த ம்.       மனமற்ற அந்த நிலையில் பிரபஞ்சப் பருப்பொருட்களிலிருந்து என் சுயம் தன் மாறுபாடுகளை முற்றிலுமாக இழந்து போகின்றது. அது, அவையுடன் கலந்து காணாமல் போகின்றது. அந்த ஒரு புள்ளி வாழ்வின் சம்பவங்களில் அந்தமானது. உண்மையில் அது சுயத்தின் சம்பவமல்ல. சுயத்தின் வெளியில் உள்ள  ஒன்றின்  சம்பவம். சம்பவங்கள் அற்ற சுயத்தின் அந்நிலையில் சுயம் தன் கால பரிமானத்தை முற்றிலுமாக இழக்கிறது. அது ஒருவகையில் தூக்கம் போன்றது  என்றாலும் அது உண்மையில் தூக்கம் இல்லை. தூக்கத்தில் மனம் முற்றிலுமாக ஒடுங்குவதில்லை. மாறாக அது வெறுமனே சற்று ஓய்வு கொள்கிறது. ஆயினும் அது பூரண ஓய்வு அல்ல. கனவுகளில் கால்கள் பாவித்து அது கொள்ளும

வெந்து தணிந்தது..

Image
கங்கை சிந்து காவிரியாய் -நீள் கோதா வரியுடன் சரஸ்வதியாய் பொங்கிய நதிகளை மாதர் என்பார்-நிதம் போற்றியே அவை தினம் தொழுதிடுவார் கலைமகள் மலைமகள் அலைமகளாய் -உயர் காளியாய் மேரியாய் மாரியளாய் - புவி கண்கண்ட தெய்வங்கள் யாவையுமே -இங்கு காரிகை வடிவம் என்றுரைப்பார்   பாரத தாயையும் பெண் என்பார் - மிகை பாரதர் அவள் பெறு பிள்ளை என்பார் மரத்தையும் பசுவையும் பூமியையும்- தினம் மாதர் என்றே அவர் கைதொழுவார் ஈங்கிதைக் கேட்டு வையமெலாம் உள்ள மங்கையர் யாவரும் பாரதத்தில் - வந்து மாதராய் பிறந்திட ஏங்கி நின்றார் - மெய் அறிந்தபின் அவரே மனம் பதைத்தார் கருப்பை சுமப்பது பெண்ணை என்றால் -அந்த கருவறை ஆனது கல்லறையாய்  அதற்கும் தப்பி அவள் பிறந்தால் -உயிர் அறுத்தது நெல்மணி, கள்ளிப் பால் வீட்டினில் பெண்டிரை பூட்டி வைத்தார் -பின் வெளியினில் அனுப்பிட காவல் வைத்தார் தீட்டு என்றே சொல்லித் தள்ளி வைத்தார் -வெறும் மாட்டை விற்பதுபோல் மண முடித்தார் கருப்பை சுமந்திடும் கடவுளவள் - அவள் விருப்பை வெறுப்பை எவர் அறிந்தார்? நெருப்பை நெஞ்சினில் பல காலம் - தம் இருப்பெ

உன்னை நீ அறிவாய்

Image
ஒன்றுண்டு தர்மம் -  இந்த உலகத்தை அது இயக்கும் நன்றதனைத் தெளிந்ததனால் நமனுக்கும் அஞ்சேன் யான் கொன்றுண்டு வாழ்வதற்க்கு குகைவாழும் மிருகமல்ல நன்றுண்டு இரு கைகள் நஞ்சிற்கும் பணியேன் யான் பட்டங்கள் சிலநேரம் பறவைகள் மேல் பறந்து வட்டங்கள் அடிப்பதுண்டு வாய்விட்டும் சிரிப்பதுண்டு கொட்டம் அடிக்கையிலே கொடி சற்றே அறுந்துவிடில் நட்டம் எதற்கென்று ந ன் கறிந்தால் துயரமில்லை   தொங்கும் சிரமெதற்கு? துயரெதற்கு? பயமெதற்கு? பொங்கும் மனத்துள்ளே பொரிந்தெரியும் வலியெதற்கு? மங்கும் விழியெதற்க்கு? மடிகொண்ட உடலெதற்கு? தங்காது என அறிந்தும் தளராத பற்றெதற்க்கு? எங்கும் சோதியுண்டு. இருள் சூழ்ந்த நெஞ்சம் ஏன்? தங்கும் அறிவிருக்க தளர்ந்துவிடும் உள்ளம் ஏன்? கங்கும் தோற்றுவிடும்  கதிரொத்த சிந்தை உண்டு மங்கும் மிடிமை ஏன்? மயக்கம் ஏன்? தயக்கம் ஏன்? உன்னை நீ அறிவாய் உனையன்றி யாரறிவார்? கண்ணை நீ அறிந்தால் காட்சியெலாம் தெளிவாகும் மண்ணை நீ அளப்பாய், மடியுதைத்து நீ எழுந்தால்.. திண்ணை பேச்செதற்க்கு தெளிவாய் எது உண்மையென ..! மிச்சம் எதுவும் வைக்காதே மீண்டும் இல்லை இவ்வாழ்க்கை து

தெய்வங்கள் - சிறுகுறிப்பு

தெய்வங்கள் இரண்டு வகைப்படும்.. ஒன்று, சக்தி இல்லாத தெய்வங்கள்.. இரண்டு, சக்தி உள்ள தெய்வங்கள். சக்தி இல்லாத தெய்வங்களுக்கு கோயிலோ, பூசைகளோ இருப்பதில்லை.. அவைகள் பெரும்பாலும் ஆயுதங்கள் ஏந்தி அறியாதவை.. மனிதரோடு மனிதராக திரிந்தாலும் எவராலும் கண்டுகொள்ளப்படாத அற்ப தெய்வங்கள் இவை.. எந்நேரமும் எதையாவது செய்துகொண்டு அலையும் இந்த தெய்வங்களை அடையாளம் காண்பதும் மிக எளிது. ஒருநாள் நீங்கள் தெருவில் தவறி விழுந்து பாருங்கள்.. பதறி வந்து உங்களை தூக்கும் கரங்கள் இந்த தெய்வங்களுடையதாகவே இருக்கும்.. மருந்து கொஞ்சம் அதிகமாகி சாலை நடுவில் நீங்கள் சரிந்து கிடக்கையில் திட்டியபடி ஒதுங்கி செல்வொருக்கு நடுவே மூக்கை பொத்தியபடி உங்களை ஓரமாக இழுத்து விட்டுவிட்டு கடந்து சென்றதும் இந்த தெய்வங்கள்தான்.. சாதி மதம் இந்த தெய்வங்களுக்கு இருப்பதில்லை.. எவருக்காகவும் எந்நேரமும் கண்ணீர் விடக்கூடிய கூறு கெட்ட தெய்வங்கள்.. காணிக்கை எதையும் இவைகள் ஏற்பதில்லை, பசியுடன் இருந்தால் கூட.. உலகத்தின் பாரம் சுமக்கிறோம் என்ற மனோவியாதி கொண்ட இந்த தெய்வங்கள் சிலநேரம் தம் குடும்பங்களுக்கு மட்டும் துர்கனவாகிப் போகும் கூத்தும் உண்

பனித்துளி: சில கேள்விகள்

Image
பனித்துளி : சில கேள்விகள் * எந்த தேவதைகள் குளிக்க     இந்த தளிர்கள்     நீர் சுமந்து காத்திருகின்றன  ? * பனித்துளி குடித்து     எப்படி தாகம் தணிகிறான்     சூரியன் ? * ரோஜாக்களின் பருக்கள் மட்டும்     எப்படி இத்தனை அழகாய் ? * தாவரங்களுக்கும்    அம்மை வருமோ ? * பனிக்காற்றுக்கு     புற்கள் மேல் என்ன காதல்..?    முத்துகளால் அலங்கரித்து      பார்க்கிறதே.. ! * மார்கழிக் காலையில்     புல்வெளியைப் பார்க்கின்றேன்..    ஒரு பூமிமேல்     எத்தனை பூமிகள்..! * இரவெல்லாம்    காற்று விதைத்த    முத்துக்களை    காலையில் கதிரவன் ஏன்    அறுவடை செய்கிறான்..? * இந்த பனித்துளிகள்     மலர்மேல் உள்ளவரை    வைரமாயும்      கீழே விழுகையில்    கண்ணீராயும்    தெரிவது ஏன்.. ?

பருவநிலை

பருவநிலையில் கடந்த பதினைந்து நாட்களுக்கும் மேலாய் சேலம் அடையாளம் தெரியாமல் மாறிப்போய்விட்டது. தினசரி மாலை மூன்றிலிருந்து ஆறு மணிக்குள் ஒரு மழை. அதற்காய் நாள் முழுதும் முகம் மூடிக் கிடக்கும் வானம். சூரியன் சுள்ளெனக் காய்வதைக் கண்டே நாட்கள் பலவாகிவிட்டது.  மோனாலிசாவின் மர்மப்புன்னகை போன்ற இந்த புதிய பருவங்கள் நமக்கு நாளை எதைக் கொண்டு வந்து சேர்க்குமோ.. அதற்காய் இன்றென்ன செய்ய? வெறுமனே இந்த மாற்றங்களை ரசித்தபடி இருக்கின்றேன். இயற்கையின் பாதையில் ஒரு மனிதன் செய்யக் கூடிய ஆகச்சிறந்த காரியம் இதைவிட வேறென்ன இருக்க முடியும்..? ''எனது வீடு எரிந்துபோனதால்  நன்றாகப் பார்க்க முடிகிறது உதிக்கும் நிலவை..!'' - ஒரு ஜென் கவிதை

நினைவுகள்

Image
நட்சத்திரம் உதிரும் வானம்.. கருங்கடலில் மிதக்கும் வெண்பந்து  இல்லத்து முற்றத்தில்  கயிற்றுக் கட்டிலில்  பிணமாய் உறங்கும்  என் கால்களை  சாமத்தில் நக்கிடும்  கரும்பூனையின் ஈரநாக்கு  உன் நினைவுகள்

படித்ததில் பிடித்தது..

Image
காளி தேவியை நரேந்திரர் ஏற்றுக்கொண்டதை ஸ்ரீராம கிருஷ்ணர் மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகக் கருதினார்.  ஏன்? காளி-மயானம், சுற்றிலும் எரிகின்ற பிணங்கள், பேய்களின் கோரத் தாண்டவம், நரிகளின் ஊளைச் சத்தம், விரித்த கூந்தல், ரத்தம் சொட்டத் தொங்கும் நாக்கு, மனிதத் தலைகள் கோர்த்த மாலை, கையில் ரத்தம் சொட்டும் வாள், வெட்டப்பட்ட தலை, சிவபெருமானின் மார்புமீது நிற்கின்ற கோலம் இது அவளது தோற்றம்! வாழ்க்கையின் மறுபக்கத்தைக் காட்டுகின்ற ஒரு சின்னமாக விறங்குகிறாள் அவள்.  இன்பமும் இதயமும் இனிமையும் அழகும் ஆனந்தமும் மட்டும் கலந்தது அல்ல வாழ்வு. வாழ்விற்கு மறுபக்கம் ஒன்று உள்ளது. துன்பமும் துயரமும தீமையும் கோரமும் அழுகையும் நிறைந்தது அது. அது எங்கிருந்து வந்தது? சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளிலேயே அதனைக் கேட்போம். தீமை ஏன் உள்ளது? இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரே வழி நன்மை, தீமை இரண்டையும் கடவுள் படைத்தார் என்று கொள்வதே.... இறைவன் எப்போதும் நல்லவரேயானால், இந்தத் தீமையனைத்திற்கும் பொறுப்பாளி யார்? சாத்தான் என்று ஒரு பேர்வழி இருப்பதாகக் கிறிஸ்தவரும் முகமதியரும் கூறுதின்றனர். இரண்டு பேர்வழிகள்