விடியல்



# விடியல்வரை
   காத்திருந்த ஈசல்கள்,
   விடிந்ததும் மடிந்து போகின்றன.!
   மடியாமல் ஈசல் பறக்க 
  விடியாமல் போகாதோ,
  பாழும் இருள்...!

# விடியல்வரை 
   காத்திருந்த ஈசல்கள்,
  விடிந்ததும் மடிந்து போகின்றன.!
   மடியாமல் ஈசல் பறக்க 
   விடியாமல் போகுமோ,
   பாழும் இருள்...!

(ஒரே  வார்த்தையில் கவிதைகளின் கரு மாறிப் போவது, ஆச்சர்யமானது. அதுவும் கவிதை இலக்கியத்தின் ஒரு  தனிசிறப் பு என்றும் தோன்றுகிறது. மேலே உள்ள கவிதைகளில் முன்னை கருணையையும், பின்னை மறுமலர்ச்சியையும் கருவாய் கொண்டமைந்து, ஒரே வார்த்தையில் மாற்றம் பெற்றமை, விபத்தேயன்றி திட்டமிட்டதன்று!)


   

Comments

Post a Comment

Popular posts from this blog

அழிவின் ஞானம்

Be Present

கனவுலகம்