சொல்லடா பிரகாசா

வாழ்க்கையே உண்மையில் நோக்கமாய் இருக்கையில், வாழ்க்கையில் எதற்கடா நோக்கங்கள் பிரகாசா..?? சொல்லடா ஞானச் சுயம்பிரகாசா !

ஆதியும் அந்தமும் ஆனவன்உனக்குள்ளே.. அர்த்தமில் தேடல்கள் எதற்கடா பிரகாசா..? சொல்லடா ஞான சுயம்பிரகாசா !

காலமேயானவன் காலமில்லாதவன்-காலம் குறித்தெலாம் கவலையேன் பிரகாசா..? சொல்லடா ஞான சுயம்பிரகாசா !

வாழ்தல் வரமாம் சாதலே சாபமாம் -மாயை இதனினும் வேறெதுப் பிரகாசா..? சொல்லடா ஞான சுயம்பிரகாசா.. !

விண்ணெலாம் நிறைந்தவன் தானேன உணர்ந்தவர் மண்ணிடம் தோற்பதும் நடக்குமோ பிரகாசா.. ? சொல்லடா ஞானச் சுயம்பிரகாசா !

நாடகம் உலகெலாம் நானில்லை நீயில்லை.. அவன் அவள் மட்டுமே அறிவையோ பிரகாசா..? சொல்லடா ஞான சுயம்பிரகாசா !

இருளில்லை ஒளியது.. குளிரில்லை தனலது.. நீயின்றி போகினால் ஏதடா பிரகசா..?சொல்லடா ஞான சுயம்பிரகாசா !

மண்ணெலாம் பொன்னடா.. ரெண்டுமே ஒண்ணடா.. பேதங்கள் செய்வதிடும் பேயெது பிரகாசா..?சொல்லடா ஞான சுயம்பிரகாசா !


Comments

Popular posts from this blog

அன்னமய்யா